சினிமா சூழ் உலகு - பகுதி 2

காலக் காலின் ஞெகிழமே! - 2

காலக்காலின் ஞெகிழமே!
 
காலக்கால்; உவமைத்தொகை. காலம் போன்ற கால் என விரியும். இதைப் பாடலாசிரியர் என்ன பொருளில் கையாண்டிருக்கிறார் என்பது சரியாகப் புலப்படவில்லை.

காலம் போல ஓடிக்கொண்டிருக்கும் கால்கள் எனக்கொண்டாரோ என்னவோ. இப்படியான காலின் ஞெகிழமே என்கிறார் அடுத்த சொல்லில்.

ஞெகிழம் என்பது பலபொருட்களைக் கொண்ட ஒரு சொல். அதில் தீ, சிலம்பு என்பனவும் உண்டு. இங்கு காலுடன் இணைந்திருப்பதால் சிலம்பு எனக்கொள்வோம்.





சிலப்பதிகாரத்தில் துன்ப மாலைப் பகுதியில்
“அரசுறை கோயில் அணியார் ஞெகிழம்” என்பதில் ஞெகிழம் என்பது சிலம்பு குறித்து வந்தது காண்க.

காலக் காலின் சிலம்பே... இனிய இசையை உடைய சிலம்பே என்று சொல்லலாமோ? அல்லது காலக்காலுக்கு வேறு ஏதும் பொருளிருக்கிறதா?

தெரிந்தவர்கள் சொல்லலாமே.
***

//பாடலாசிரியர் அளித்த பதில்
“காலம் என்ற மங்கையின் கால்களில் அணிந்த சிலம்பு நீ”
என்பதே பொருள்.
காலம் ஓடிக்கொண்டே இருக்க, அந்த ஞெகிழத்தின் ஓசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.

நன்றி,
கார்க்கி//

தொடரும்.
 ***

இங்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, காப்புரிமைக்குட்பட்டதென அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும். நன்றி.

 Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog. Thank you.
 


நிறோஷ் ஞானச்செல்வம்
2017.03.15

Comments