சினிமா சூழ் உலகு - பகுதி 3

காலக்காலின் ஞெகிழமே - 3

நேற்றைய பதிவில் காலக்கால் என்பதை உவமைத் தொகை எனக்கொண்டு காலம் போன்ற கால் என்று சொல்லியிருந்தேன்.

பாடலாசிரியர் அதை வேறு விதமாகக் கையாண்டிருக்கிறார்.

//“காலம் என்ற மங்கையின் கால்களில் அணிந்த சிலம்பு நீ”
என்பதே பொருள்.
காலம் ஓடிக்கொண்டே இருக்க, அந்த ஞெகிழத்தின் ஓசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.
நன்றி,
கார்க்கி//
என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
***

மனதில் மலரும் மகிழமே!

மகிழ மரம் வகுளம் மற்றும் இலஞ்சி என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இதன் விஞ்ஞானப்பெயர் Mimusops elengi என்பதாகும்.




குறிஞ்சிநில மகளிருடன் தொடர்புடைய 99 மலர்களில் இதுவும் ஒன்று என்கின்றார்கள். குறிஞ்சிப்பாட்டில் இதை
“பசும்பிடி வகுளம்” என்கின்றார் கபிலர்.

நட்சத்திர வடிவ மலர்கள். வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் இருக்கும். நறுமணமுள்ளவை.
சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டம் புறஞ்சேரி இறுத்த காதையில் வைகை நதிக்கரை மலர்களுள் ஒன்றாக இது சொல்லப்பட்டிருப்பதை
“குரவமும் வகுளமும் கொங்கமும் வேங்கையும்” எனத்தொடங்கும் பாடல் மூலம் அறியலாம்.

தொடரும்...
***

  
இங்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, காப்புரிமைக்குட்பட்டதென அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும். நன்றி.

Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog. Thank you.
 

நிறோஷ் ஞானச்செல்வம்
2017.03.16

Comments