கள்ளம் கபடம் இல்லா உள்ளம்...!

எனது மரபுக்கவிதைகளையும் ஏனைய கவிதைகளையும் இவ்வலைப்பூவில் பகிர்வது மகிழ்ச்சி...

மரபிலக்கணம் அறியாக் காலத்தில் எழுதிய ஒரு கவிதை கலிவிருத்த யாப்பினுள் அடங்குவதனால் அதனையே முதலில் பதிகின்றேன்.

கவிதை :

குழந்தை உள்ளம்...!

கள்ளம் கபடம் இல்லா உள்ளம்
விள்ளும் மனத்தில் மகிழ்ச்சி கொள்ளும்
அள்ளி எடுத்தே அணைக்கத் தோன்றும்
கொள்ளை இன்பம் அதுவே யாண்டும்!

(வகை : கலிவிருத்தம்)
2012.03.21




யாப்பறியாக் காலத்தில் யாத்த கவி என்பதனால் மோனைச் சிறப்பு எல்லா அடிகளிலும் அமையவில்லை.

முகநூலில் என் கவிதைகளை வாசிக்க...
பக்கத்தை அணுகவும் .

நன்றி நண்பர்களே...

(Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog.
படங்கள் : Googleஇல் இருந்து தரவிறக்கப்பட்டவை. இவற்றில் சில காப்புரிமை பெற்றிருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அவை இவ் வலைப்பூவிலிருந்து நீக்கப்படும்.)

Comments