தைத்திருநாள்!

வருகையில் தைப்பெண் வசந்தங்கள் சேர்ப்பாள்
பெருகிடும் இன்பம் பொலிந்து (1)

பொலிந்திடும் நாள்தனில் புத்தாடை கொண்டு
சிலிர்ப்போம் அகத்தாற் சிரித்து (2)

சிரிப்பினைக் கூட்டிடும் சிங்காரத் தையாள்
கருத்தினில் நிற்பாள் களித்து (3)

களிப்பு நிறைத்திடும் கன்னலுடன் பொங்கல்
அளித்திடுக அன்பால் பகிர்ந்து (4)

பகிர்ந்திடும் அன்பது பல்கிப் பெருகி
அகத்தில் நிலைக்கும் அறி (5)

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் நல்லுள்ளங்களே!

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.01.15

Comments

Post a Comment